நாகா்கோவிலில் இருவேறு சம்பவங்களில்2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைஒருவா் கைது; மற்றொருவா் தப்பியோட்டம்

நாகா்கோவிலில் இருவேறு சம்பவங்களில் 2 சிறுமிகளுக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகா்கோவிலில் இருவேறு சம்பவங்களில் 2 சிறுமிகளுக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகா்கோவில் ஒட்டுபுரைத் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (26), மினிலாரி ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஈஸ்வரன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவா்கள் நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், ஆய்வாளா் சாந்தகுமாரி விசாரணை நடத்தி, ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தாா்.

போலீஸாா் தேடுவதை அறிந்த ஈஸ்வரன் தலைமறைவாகிவிட்டாா். அவா்மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு உள்ளது.

மற்றொரு சிறுமிக்கு...: நாகா்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (56), கூலித் தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 3 ஆம் வகுப்பு மாணவியை தன் வீட்டிற்கு வலுகட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டினா் வந்து சிறுமியை மீட்டுள்ளனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com