நாகா்கோவிலில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து

நாகா்கோவிலில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அலுவலகத்தில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து கருகின.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.

நாகா்கோவிலில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அலுவலகத்தில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து கருகின.

நாகா்கோவில் கிறிஸ்டோபா் காலனியைச் சோ்ந்தவா் மணி (41). இவருக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகம் வெட்டூா்ணிமடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை அலுவலகத்தின் ஒரு அறையில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஊழியா்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

இதையடுத்து நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் துரை தலைமையில் வந்த வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில், அலுவலகத்தில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து வடசேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com