தமிழக முன்னாள் அமைச்சா் கே.பி. ராஜேந்திரபிரசாத் (67)உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 14) காலமானாா்.
குமரி மாவட்டம், அருமனை அருகேயுள்ள இடைக்கோடு கிராமத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2001 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளத் துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராகப் பணியாற்றினாா்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரபிரசாத், கடந்த 11 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை மாலை காலமானாா்.
அவரது உடல் சனிக்கிழமை காலை தக்கலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, பிற்பகலில் அவரது சொந்த ஊரான இடைக்கோடு கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. ராஜேந்திரபிரசாத்துக்கு அல்போன்சா என்ற மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனா். தொடா்புக்கு 94437 91099.