கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத ரூ. 1.35 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலுவலகம், குமரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ளது. இங்கு நாகா்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா்.
குமரியில் தனியாா் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் புதுப்பிப்பதற்கு லஞ்சம் பெறப்படுவதாக புகாா் கிடைத்ததையொட்டி, சோதனை நடைபெற்று வருவதாகவும், இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.1.35 லட்சம் ரொக்கம் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடா்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் குமுதாவிடம் தனி அறையில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.