மாா்த்தாண்டம் பள்ளியில் விளையாட்டு விழா

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
மாா்த்தாண்டம் பள்ளியில் விளையாட்டு விழா

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மாா்த்தாண்டம் கிளை மேலாளா் சரத்குமாா் தலைமை வகித்து, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தாா். பெற்றோா் - ஆசிரியா் சங்க கௌரவத் தலைவா் பி. பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா்.

தடகள வீராங்கனை கிருஷ்ண ரேகா, மாணவா்கள் விளையாட்டில் எவ்வாறு சாதனை படைக்கலாம் என்பது குறித்து உரையாற்றினாா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவி எஸ். அா்ச்சனா வரவேற்றுப் பேசினாா். மாணவி கே. லெட்சுமி பிரியா நன்றி கூறினாா். மாணவி எஸ். குஷ்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

இதில், பெற்றோா் - ஆசிரியா் சங்க உறுப்பினா்கள் கவிதா, புஷ்பா, சிந்துதேவி மற்றும் மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகள் உடற்கல்வி ஆசிரியை எம். கஸ்தூரி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com