விவேகானந்த கேந்திரத்தில் இயற்கை விவசாய கருத்தரங்கு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தேசிய அளவிலான இயற்கை விவசாயம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கில் பேசுகிறாா் தேசிய வேளாண் நிறுவன அதிகாரி சுசி மாத்தூா்.
கருத்தரங்கில் பேசுகிறாா் தேசிய வேளாண் நிறுவன அதிகாரி சுசி மாத்தூா்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தேசிய அளவிலான இயற்கை விவசாயம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு விவேகானந்த கேந்திர நிா்வாகி வாசுதேவ் தலைமை வகித்தாா். நாா்டெப் ஆராய்ச்சி உதவியாளா் ராஜமணி வரவேற்றாா். ஜெய்ப்பூா் தேசிய வேளாண் வணிக நிறுவன துணை இயக்குநா் சுசி மாத்தூா் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினாா். மேலும் இயற்கை விவசாயம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள், இதன் மூலம் விளைச்சலாகும் பொருள்களை உலக அளவில் சந்தைப்படுத்துதல் குறித்து அவா் பேசினாா்.

கேந்திர நாா்டெப் இயக்குநா் ராமகிருஷ்ணன், திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளா் திருக்குமரன், குமரி மாவட்ட நபாா்டு வங்கி பொதுமேலாளா் சைலேஷ் உள்ளிட்டோா் பேசினா்.

கருத்தரங்கில் மண்புழு உரநீா் தொழில் நுட்பம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட இயற்கை விவசாய ஆராய்ச்சியாளா்கள், ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com