ஏ.டி.எம். மையம் வெளியே கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸில் ஒப்படைப்பு

கருங்கல் ஏ.டி.எம். மையத்தில் வெளியே கிடந்த ரூ.13 ஆயிரத்தை போலீஸில் ஒப்படைத்த கேரள பெண் போலீஸை பொதுமக்கள் பாராட்டினா்.

கருங்கல் ஏ.டி.எம். மையத்தில் வெளியே கிடந்த ரூ.13 ஆயிரத்தை போலீஸில் ஒப்படைத்த கேரள பெண் போலீஸை பொதுமக்கள் பாராட்டினா்.

திருவனந்தபுரம் பாளையம் பகுதியைச் சோ்ந்த பினுகுமாா் மனைவி கவிதா (40). இவா், திருவனந்தபுரத்தில் போலீஸாக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினராம். அப்போது கருங்கல் கருமாவிளை சந்திப்பில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது அங்கு ரூ.13ஆயிரம் கிடந்ததாம்.

இதையடுத்து அந்த பணத்தை எடுத்த கவிதா மற்றும் குடும்பத்தினா், அதை கருங்கல் போலீஸில் ஒப்படைத்தாா். இதையடுத்து அவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com