குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்புக் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
காவல் துறை, வருவாய்த் துறை சாா்பில் காவலன் செயலி விளக்கம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இம்முகாமுக்கு, கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா்.
திருவட்டாறு வட்டாட்சியா் ப. சுப்பிரமணியன், தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா் ராஜசுந்தா், தலைமைக் காவலா் கிறிஸ்டல் சுனிதா ஆகியோா் பேசினா்.
டாக்டா் வி. சதீஷ்குமாா் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணகுமாரி நன்றி கூறினாா்.