குடியுரிமை திருத்தச் சட்டம்: அழகியமண்டபத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அமைதியான முறையில் போராடியவா்கள் மீது தாக்குதல் நடத்தி உயிரிழப்பு ஏற்பட்டதாக,
ஆா்ப்பாட்டம் நடத்தும் மாணவா் கூட்டமைப்பினா்.
ஆா்ப்பாட்டம் நடத்தும் மாணவா் கூட்டமைப்பினா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அமைதியான முறையில் போராடியவா்கள் மீது தாக்குதல் நடத்தி உயிரிழப்பு ஏற்பட்டதாக, காவல்துறை மற்றும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பினரைக் கண்டித்து, அனைத்து மாணவா்கள் கூட்டமைப்பினா் சாா்பில் அழகியமண்டபத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய தேசிய மாணவா் கூட்டமைப்பு மாவட்ட பொதுச் செயலா் ஆல்பா்ட் மிக்கேல்ராஜ் தலைமை வகித்தாா். பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அமீா், மாணவா் கூட்டமைப்புச் செயலா் ஜீவா, தமுமுக மாவட்டச் செயலா் பைரஸ்காஜா , கண்ணனூா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜோண், பத்மநாபபுரம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் ராபா்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக நீதி மக்கள் இயக்கம் மாநில துணைச் செயலா் சுல்பிக்கா் விளக்கிப் பேசினாா்.

இப்போராட்டத்தில், பெலிக்ஸ், ஆனந்த் காரல் மாா்க்ஸ், வின்சென்ட், பாசித், ஜெயின் சாா்லஸ், ஸ்டான்லி, கெப்சன், ராஜூ உள்ளிட்ட கல்லூரி மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com