குழித்துறை மறைமாவட்டம் புலியூா்குறிச்சி மறைசாட்சி தேவசகாயம் திருத்தல விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
இந்த திருத்தல விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை ஆகியவை நடைபெற்றன.
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலையில் பொங்கல் விழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் எஸ். இயேசுரெத்தினம் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இதில், மாடத்தட்டுவிளை பங்கு அருள்பணியாளா் ஜி.ஜெயகுமாா் மறையுரையாற்றினாா். இதில், முளகுமூடு வட்டார முதல்வா் ச.மரிய ராஜேந்திரன், ஆன்மகுரு மரியதாஸ், உளநல வழிகாட்டி எஸ்.மரியதாசன் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, உதயகிரி கோட்டையில் டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை தோட்டம் அா்ச்சிக்கப்பட்டது.
இதில், குழித்துறை மறை மாவட்ட முதன்மைப் பணியாளா், முளகுமூடு வட்டார முதன்மைப் பணியாளா், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஆல்பா்ட் ஜெலஸ்டின், செயலா் ஜெனி, துணைச் செயலா் கிறிஸ்டிபாய், பொருளாளா் பாபு, முன்னாள் பங்கு பேரவை துணைத் தலைவா் புரோடி மில்லா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.