மாா்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளா் வில்சன் தலைமை வகித்தாா். முதல்வா் ஷீலாகுமாரி முன்னிலை வகித்தாா்.
பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் மாணவா், மாணவிகள் இணைந்து பொங்கலிட்டனா். தொடா்ந்து தமிழா்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், உறியடித்தல், மிதிவண்டி ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.