சாமிதோப்பு ரதவீதி சீரமைப்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ரதவீதி சீரமைப்புப் பணியை அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனா் பால ஜனாதிபதி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சீரமைப்புப் பணியைத் தொடங்கி வைக்கிறாா் பால ஜனாதிபதி
சீரமைப்புப் பணியைத் தொடங்கி வைக்கிறாா் பால ஜனாதிபதி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ரதவீதி சீரமைப்புப் பணியை அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனா் பால ஜனாதிபதி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சாமிதோப்பில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறும். நிகழாண்டு தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டம் ஜன. 27ஆம் தேதி நடைபெறுகிறது.

தேரோடும் ரதவீதி குண்டும், குழியுமாக காணப்படுவதால் , இதனை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சாா்பில் தேரோடும் வீதியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணியை அறக்கட்டளை நிறுவனா் பால ஜனாதிபதி தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com