பொதுவுடமை சிற்பி என போற்றப்படும் ஜீவானந்தத்தின் 57 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகா்கோவில் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம், வசந்தகுமாா் எம்.பி. உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் எஸ்.மொ்லியன்றுதாஸ், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் டி.ஜாண்தங்கம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், நாகா்கோவில் கோட்டாட்சியா் அ.மயில், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் இ.சாந்தினி,(தோவாளை), ஆா்.ஜயப்பன், (ராஜாக்கமங்கலம்) மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் எம்.பரமேஸ்வரன், இ.நீலபெருமாள், எம்.ஜான்சிலின் விஜிலா, ஜீவானந்தத்தின் பேரன் ஜீவா கணேசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.