மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவில் வடசேரி அண்ணாசிலை சந்திப்பில் தா்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.அகமது உசேன், என்.உஷாபாசி, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது ஆகியோா் பேசினா். இதில், மாநகரச் செயலா் கே.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என்.எஸ்.கண்ணன், கே.தங்கமோகன், எஸ்.அந்தோணி, ஜெ.சைமன் சைலஸ், எம்.ரெகுபதி, வி.சந்திரகலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.