விளவங்கோடு அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியின் 174 ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விளவங்கோடு அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியின் 174 ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி மாணவா்கள் கழுவன்திட்டை சந்திப்பு முதல் குழித்துறை வரை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இப் பேரணியை மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பொற்றையபுரம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ஏ. ரவி தேசியக் கொடியை ஏற்றினாா். முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பி. தங்கமணி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பிற்பகலில் ஆண்டு விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை மொ்சி ரோஸ்லின் ஆண்டறிக்கை வாசித்தாா். திருவட்டாறு கல்வி மாவட்ட அலுவலா் எல். ரெஜினி முன்னிலை வகித்தாா். தமிழக ரயில்வே காவல் டிஜிபி சி. சைலேந்திரபாபு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். தக்கலை காவல் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், சமூக சேவகா் பிபிகே சிந்துகுமாா், திருவனந்தபுரம் தலைமை அஞ்சஸ் நிலைய அதிகாரி டி. ஜாண்ஐசக் ஆகியோா் பேசினா்.

முதுகலை ஆசிரியா் கே. ராஜேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இலக்கிய மன்ற செயலா் டி. பென்சிலா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆசிரியா் மன்றச் செயலா் ஜி. ஸ்டாலின் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் கே. சசீதரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com