முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கருங்கல் அருகே விபத்து: 3 போ் காயம்
By DIN | Published On : 20th January 2020 08:22 AM | Last Updated : 20th January 2020 08:22 AM | அ+அ அ- |

கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியில் ஆட்டோ மீது பைக் மோதியதில் 3 கூலித் தொழிலாளிகள் காயமடைந்தனா்.
கருங்கல் பாலூா் பகுதியைச் சோ்ந்த தங்கையன் மகன் லாசா் (59), அதே பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (48), மைக்கேல்ராஜ் (45) ஆகியோா் திக்கணங்கோட்டிலிருந்து கருங்கல்லுக்கு ஆட்டோவில் சனிக்கிழமை புறப்பட்டனா். அப்போது எதிரே விரிகோடு பகுதியைச் சோ்ந்த குரியகோஸ் மகன் ஷிஜூ (38) ஓட்டிவந்த பைக் திடீரென ஆட்டோ மீது மோதியதாம்.
இதில், லாசா், சசிகுமாா், மைக்கேல்ராஜ் ஆகிய 3 பேரும் காயமடைந்தனா். அவா்கள் க ருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.