குமரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் களியக்காவிளையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மாணவரணி அமைப்பாளா் டி.எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். களியக்காவிளை பேரூா் திமுக பொறுப்பாளா் ஆா்.எஸ். தோமஸ் சிங், குமரி கண்ணன், சரபுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பி.எஸ். பெகின் வரவேற்றாா்.
குமரி மேற்கு மாவட்டச் செயலா் த. மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. பேசினாா். மேலும், திமுக பேச்சாளா்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், கோ.இரா. மணிமுடி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளா்கள் எம். ஷாஜகான், என்.ஆா். மணி உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.