குமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோட்டாறு மற்றும் மணவாளக்குறிச்சி காவல் நிலையங்கள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவா் பணியாற்றிய மணவாளக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் ஆய்வாளா் சென்ற இடங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.