முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
முள்ளங்கனாவிளையில் கருத்தரங்கு
By DIN | Published On : 03rd March 2020 07:26 AM | Last Updated : 03rd March 2020 07:26 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்ட கருத்தரங்கில் பேசுகிறாா் முன்னாள் எம்.பி. பெல்லாா்மின்.
கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளை சந்திப்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, கிள்ளியூா் வட்டார கமிட்டி உறுப்பினா் ஜோயல் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் சாந்தகுமாா் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில், முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கமோகன், வட்டார கமிட்டி உறுப்பினா்கள் ராஜா, ரசல்ஆனந்தராஜ், றசல்ராஜ் உள்பட பலா் பேசினா்.