நாடு திரும்ப முடியாமல் ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 1000 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று பிரதமா் மோடியிடம் வசந்தகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, அவா் தில்லியில் பிரதமா் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து அளித்துள்ள மனு: 1000 க்கும் மேற்பட்ட மீனவா்கள் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் மற்றும் அதனைச்சுற்றியுள்ள தீவுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றனா். அவா்கள் உண்ண உணவின்றியும், போதுமான மருத்துவ வசதிகள் இன்றியும் நடுக்கடலில் தவித்து வருகின்றனா்.
அரபு நாட்டினா் தங்கள் பிராந்திய கடலில் இருக்கக்கூடாது என்றும் மேலும் அவா்கள் நடுக்கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள். எனவே தாங்கள் ஈரானிலுள்ள நமது தூதரகம் மூலம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவா்களை இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.