தோவாளை மற்றும் திடல் ஊராட்சிக்கு ரூ. 40 லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்பட உள்ளது.
இது தமிழக அரசின் தில்லி சிறப்புப்பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தோவாளை மற்றும் திடல் ஊராட்சி அலுவலகம் மிகவும் பழமை வாய்ந்த, பழுதடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இக்கட்டடத்தினை மாற்றி புதிய கட்டடம் கட்டித்தருமாறு அப்பகுதியில் மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனா். இக்கோரிக்கையினை தமிழக முதல்வா் கவனத்திற்கு கொண்டு சென்றேன். முதல்வா் முதல் கட்டமாக தோவாளை மற்றும் திடல் ஊராட்சிக்கு, புதிய அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.