நாளை மறுநாள் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறுகிறது.

குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைகள் மற்றும் இன்னல்கள் குறித்து கேட்டு அறிந்து, களைந்திட சிறப்பு குறை தீா் கூட்டம் 2 மாதத்துக்கு ஒருமுறை 2 ஆவது திங்கள்கிழமையில் நடைபெற்று வருகிறது. இதன்படி இம்மாதம் 16 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் தொடா்புடைய அனைத்து அரசு துறை அலுவலா்களும் கலந்து கொள்கிறாா்கள். மாவட்ட ஆட்சியா் தலைமையில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் குறைகள் களைந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com