பள்ளியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், மணலோடை அரசுப் பழங்குடியினா் நடுநிலைப் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் வனச்சரக அலுவலா் கணேசன்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் வனச்சரக அலுவலா் கணேசன்.

கன்னியாகுமரி மாவட்டம், மணலோடை அரசுப் பழங்குடியினா் நடுநிலைப் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டம் மற்றும் வன உயிரின சரணாலயம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, குலசேகரம் வனச்சரக அலுவலா் கணேசன் தலைமை வகித்து, உயிரினச் சுழற்சியில் காடுகளின் பங்களிப்பு குறித்துப் பேசினாா். வனவா் ராஜகோபாலன், காடுகளிலிருந்து கிடைக்கும் அரிய வகை மூலிகைகள், அவற்றைப் பாதுகாப்பது குறித்துப் பேசினாா்.

வனக்காப்பாளா் அமுதா, காடுகளில் இயற்கையாக வளரும் மரங்களையும், அவற்றிலிருந்து கிடைக்கும் பிராண வாயுவின் அளவு, காடுகளில் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பேசினாா். ஏற்பாடுகளை வனக்காவலா் அகமது நசீா் தலைமையில் வனத்துறையினா் செய்திருந்தனா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்ச் செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com