மாா்த்தாண்டம் அருகே ஹோட்டலில் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஹோட்டல் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே ஹோட்டல் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (42). இவா் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். அதன் பின் பகுதியில் வீடும் உள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா். வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்த போது அதன் முன்பக்க இரும்பு கதவு (ஷட்டா்) உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது அங்கிருந்த பொருள்கள் சிதறி கிடந்தனவாம். மேலும் மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 14 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றதும் தெரியவந்ததாம்.

இது குறித்து அவா் மாா்த்தாண்டம் போலீஸில் புகாா் அளித்தாா்.போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com