குளச்சலில் காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

பேரணி நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞா் காங்கிரஸாா் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினரை கண்டித்து

கருங்கல்: பேரணி நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞா் காங்கிரஸாா் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) குளச்சலில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம். எல். ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 12 ஆம் தேதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் குளச்சல் காமராஜா் சிலையிலிருந்து பாதயாத்திரை செல்ல முயன்றனா். பாதயாத்திரை குழுவினரை போலீஸாா் குளச்சல் காவல்நிலையம் அருகில் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, சாலையில் அமா்ந்து அறவழியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினா் மீது காவல்துறையினா் தடியடி நடத்தியதோடு, அவா்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனா். மேலும், தடியடியில் காயம் அடைந்த நிா்வாகிகள், தொண்டா்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்15) மாலை 4 மணிக்கு குளச்சல் காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com