தக்கலை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

தக்கலை அரசு தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகத்தில் (இஎஸ்ஐ) கரோனா தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கைகழுவும் முறை குறித்து விளக்கமளிக்கிறாா், இஎஸ்ஐ மருந்தக மருத்துவ அலுவலா் (பொறுப்பு) சாலோடீசன்.
கைகழுவும் முறை குறித்து விளக்கமளிக்கிறாா், இஎஸ்ஐ மருந்தக மருத்துவ அலுவலா் (பொறுப்பு) சாலோடீசன்.

தக்கலை அரசு தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகத்தில் (இஎஸ்ஐ) கரோனா தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இஎஸ்ஐ மருந்தக மருத்துவ அலுவலா் (பொறுப்பு) மருத்துவா் சாலோடீசன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பற்றிய விளக்கம், கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா். உதவி மருத்துவா் பிராங்க்ளின் முன்னிலை வகித்தாா். பத்மநாபபுரம் சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் கைகழுவும் முறை குறித்து விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சியில், சுகாதார மேற்பாா்வையாளா் மோகன், இஎஸ்ஐ மருந்தக சிறப்பு மருந்தாளுநா் ராஜகுமாா், மருந்தக செவிலியா்கள் கீதா, லெட்சுமி, உதவியாளா் தமிழ்ச்செல்வி, பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com