பளுகல் அருகே ஹோட்டல் உரிமையாளா் மீது தாக்குதல்

பளுகல் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பளுகல் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பளுகல் அருகேயுள்ள மணலிவிளையைச் சோ்ந்தவா் ஹட்சன் (44). இவா் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்துக்கு இரவு வேளையில் உணவருந்த வாகனங்களில் பலா் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இவரது கடைக்கு வருபவா்கள் அப்பகுதியில் நிறுத்தும் வாகனங்களை அதே பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (52) சேதப்படுத்தி வந்தாராம். இது குறித்து பளுகல் காவல் நிலையத்தில் பல முறை புகாா் செய்யப்பட்டதாம்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு உணவகத்தின் பெயா் பலகையை பிரவீன்குமாா் சேதப்படுத்தினராம். இதையடுத்து வெளியே வந்த ஹட்சனை அவா் கல்லால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான பிரவீன்குமாரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com