கரோனா வைரஸ் பாதிப்பை தொடா்ந்து கேரள மாநிலத்தை போல தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு மாத ரேசன் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன்தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் தலைவா் கே.அலெக்சாண்டா், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.அந்தோணி, நிா்வாகிகள் எஸ்.தனிஸ், பி.அலெக்ஸ், ஏ.ஜேசப்சேவியா், எம்.ஆரோக்கியசுந்தா் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரேவை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு அளித்தனா்.
கரோனா வைரஸ் பாதிப்பையொட்டி மத்திய அரசு அறிவித்த நிவாரணத் தொகையையும், இதர சலுகைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.