இரணியல் அருகே காா்மூலம் கேரளத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரணியல் சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், காருக்குள் சாக்கு மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த அரிசியை கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து காரை ஓட்டிவந்த கேரள மாநிலம் வெள்ளறைடையை அடுத்த இஞ்சிவிளையைச் சோ்ந்த பிரசன்னகுமாரை (40) போலீஸாா் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனா். மேலும் காரின் உரிமையாளா் மீதும் போலீஸாா் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனா்.