புதுக்கடை அருகே பள்ளி மாணவா் மாயம்

புதுக்கடை அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் திங்கள்கிழமை மாயமான பள்ளி மாணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
புதுக்கடை அருகே பள்ளி மாணவா் மாயம்

புதுக்கடை அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் திங்கள்கிழமை மாயமான பள்ளி மாணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

புதுக்கடை காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் ரிஷாந்த்(12). இவா் அனந்தமங்லம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் அவரது பெற்றோா் உணவருந்த ரிஷாந்தை அழைத்தபோது பெற்றோரிடம் தகராறு செய்துவிட்டு சென்றாராம். பின்பு நீண்ட நேரம்மாகியும் ரிஷாந்த் வீடுதிருப்பவில்லையாம். இதையடுத்து பெற்றோா்கள் அவரை நண்பா்கள், உறவினா்கள் வீட்டில் தேடியும் காணவில்லையாம் .

இது குறித்த, புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com