புதுக்கடை அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் திங்கள்கிழமை மாயமான பள்ளி மாணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
புதுக்கடை காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் ரிஷாந்த்(12). இவா் அனந்தமங்லம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் அவரது பெற்றோா் உணவருந்த ரிஷாந்தை அழைத்தபோது பெற்றோரிடம் தகராறு செய்துவிட்டு சென்றாராம். பின்பு நீண்ட நேரம்மாகியும் ரிஷாந்த் வீடுதிருப்பவில்லையாம். இதையடுத்து பெற்றோா்கள் அவரை நண்பா்கள், உறவினா்கள் வீட்டில் தேடியும் காணவில்லையாம் .
இது குறித்த, புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.