கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஹெச். வசந்தகுமாா் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கான ஒப்புதல் கடிதத்தை மருத்துவக் கல்லூரி முதன்மையா் சுகந்தி ராஜகுமாரியிடம் வியாழக்கிழமை வழங்கினாா் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன். அப்போது, கட்சி நிா்வாகிகள் சீனிவாசன், ஆனந்த், ஆரோக்கியராஜ், நவீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.