சாமிதோப்பு அருகே பாழடைந்த கட்டடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
சாமிதோப்பு அருகேயுள்ள சாஸ்தான்கோயில்விளை அளத்தங்கரை சாலை பகுதியில் பாழடைந்த கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக தென்தாமரைகுளம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளா் ஜாண் கென்னடி தலைமையில் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் விசாரணையில், இறந்தவா் சாமிதோப்பு சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்தவா் இல்லை என்பது தெரியவந்தது. இச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.