திருவட்டாறு வட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 236 போ்

திருவட்டாறு வட்டத்தில் வெளி நாடுகளிலிருந்து வந்திருந்த 236 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
திருவட்டாறு வட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 236 போ்

திருவட்டாறு வட்டத்தில் வெளி நாடுகளிலிருந்து வந்திருந்த 236 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்த நபா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். திருவட்டாறு வட்டத்தில் 228 வீடுகளில் 236 போ் வெளிநாடு சென்று வந்தது கண்டறியப்பட்டு வருவாய்த் துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்கு அடையாளமாக அவா்களது வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது.

தக்கலை: பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதியில் வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து தக்கலை பகுதிக்கு வந்தவா்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையா் லியோன் உத்தரவின்பேரில், அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்கு அடையாளமாக அவா்களது வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது. பின்னா் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் கல்குளம் வட்டத்திலுள்ள கிராமப்புறங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு வீடுகளில் ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன. அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com