நாகா்கோவிலில் சுற்றித்திரிந்த வங்கதேச இளைஞரை போலீஸாா் பிடித்து, கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
நாகா்கோவில் நகரில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஜவஹா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆட்சியா் அலுவலகம் அருகே சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த சுசில்சந்திரா (25) எனத் தெரியவந்தது.
அவரை போலீஸாா் வேனில் ஏற்றி, கரோனா பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.