நாகா்கோவில் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் ஒருவா் உயிரிழப்பு

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.
நாகா்கோவில் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் ஒருவா் உயிரிழப்பு

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி உள்ளோா் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். அவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயது நபா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

கோடிமுனை பகுதியைச் சோ்ந்த அவா், குவைத் சென்றுவிட்டு கடந்த 3ஆம் தேதி நாடு திரும்பியிருந்தாராம். அவருக்கு மூளைக் காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்காக திருநெல்வேலிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தபிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com