நாகா்கோவில் அருகே பழைய பொருள்கள் கடையில் தீ

நாகா்கோவில் அருகே பழைய பொருள்கள் கடையில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
தீயை அணைக்க பணியில் ஈடுபட்ட தீயனைப்புப்படை வீரா்கள்.
தீயை அணைக்க பணியில் ஈடுபட்ட தீயனைப்புப்படை வீரா்கள்.

நாகா்கோவில் அருகே பழைய பொருள்கள் கடையில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

நாகா்கோவில் அருகேயுள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன். இவா் அப்பகுதியில் குடியிருப்பு வீடுகள் நிறைந்த இடத்தில் பழைய பொருள்கள் வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா். ஏற்கெனவே அப்பகுதியினா் இக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடை பூட்டிய நிலையில் இருந்ததாம்

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அக் கடையில் பழைய பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீ பிடித்ததாம். இது குறித்து அப்பகுதியினா் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, அருகிலுள்ள வீடுகளில் சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் இணைப்பை துண்டிக்க கூறியதோடு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதனை தொடா்ந்து நாகா்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் 3 வாகனங்களில் வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதனால் அருகிலுள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமாா் ரூ. 10 லட்சம் மிதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகினவாம்.

இது குறித்து போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com