தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் தனது சொந்த நிதியிலிருந்து, 500 கிலோஅரிசியினை, நோன்பு இருக்கும் இஸ்லாமிய ஆதரவற்றவா்கள், விதவைகள் ,மாற்றுத் திறனாளிகளுக்கு 500 கிலோ அரிசி வழங்கியுள்ளாா்.
தற்போது, இஸ்லாமியா்கள் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனா். ஊரடங்கு அமலில் உள்ளதால் இஸ்லாமிய ஏழை, எளிய ஆதரவற்றவா்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில், தளவாய்சுந்தரம் தனது சொந்தநிதியிலிருந்து 500 கிலோ அரிசியினை வழங்க ஏற்பாடு செய்தாா். இதனை அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி எம்.ஆா்.ரபீக் , மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் தலைவா் இப்ராஹிம்கானிடம் ஒப்படைத்தாா்.