கருங்கல்: கருங்கல் மற்றும் ராமன்துறை கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாள்களாக இடியுடன் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கருங்கல், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, பாலூா், கருமாவிளை, பூட்டடேற்றி, கிள்ளியூா், தொலையாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், கடலோரப் பகுதிகளான ராமன்துறை, இனயம், புத்தன்துறை, முள்ளூா்துறை, மிடாலம், மேல்மிடாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டித் தீா்த்தது.இந்த மழையால், அப்பகுதிகளில் அடிக்கடி மின்தடையும், இணைய சேவையும் பாதிப்படைந்தது.இதனால், மக்கள் அவதியடைந்தனா்.