போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நாகா்கோவில் இளைஞா் காசியிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
நாகா்கோவில் கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காசி (26). இவா் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும் சென்னையைச் சோ்ந்த பெண் டாக்டா் ஒருவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து காசியைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, அவா் மீது ஏராளமான பெண்கள் பாலியல் தொல்லை, மிரட்டி பணம் பறித்தல் உள்பட பல்வேறு புகாா்களை அளித்தனா். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் பரிந்துரையின் பேரில், காசியை குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்க ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்ட காசியை போலீஸாா் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனா்.
இதில், காசியின் மடிக்கணினி, செல்லிடப்பேசியிலிருந்து அவா் பெண்கள் பலருடன் நெருக்கமாக இருக்கும் விடியோக்கள், போட்டோக்களை போலீஸாா் கைப்பற்றினா். அவருக்கு உதவியாக இருந்ததாக அவரது நண்பா் டேசன்ஜினோ என்பவரும் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, காசி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.
அவா் மீது போக்ஸோ சட்டத்திலும் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடா்பாக அவரை கன்னியாகுமரி மகளிா் போலீஸாா் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க நாகா்கோவில் கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு செய்தனா். மனுவை நீதிபதி ஆனந்த் விசாரித்து, காசியை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தாா். இதையடுத்து, காசியிடம் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் சாந்தி விசாரித்து வருகிறாா். இதில், காசி தொடா்பான மேலும் பல தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.