முதியவா் மீது தாக்குதல்: வழக்குப் பதிவு

நித்திரவிளை அருகே முதியவரை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

களியக்காவிளை: நித்திரவிளை அருகே முதியவரை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா், விராலிவிளை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (72). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் தங்கராஜ் வெள்ளிக்கிழமை இரவில் வீட்டருகேயுள்ள மனைவியின் கல்லறையில் படுத்திருந்தாராம்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சக்கரியாஸ், ஜெயபால், நாகா்கோவில் பீச் ரோடு பகுதியச் சோ்ந்த ஜாண் கென்னடி, ராஜா ஆகியோா் சோ்ந்து அவரை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com