தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்பு

குமரி மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி சனிக்கிழமை ஏற்கப்பட்டது.
மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ஊழியா்கள்
மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ஊழியா்கள்

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி சனிக்கிழமை ஏற்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) மா.வீராசாமி தலைமையில் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதில் வட்டாட்சியா் (நத்தம் நிலவரித் திட்டம்) வெ.கண்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவாஸ்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் தலைமையில் அலுவலா்கள்,ஊழியா்கள் உறுதி மொழி எடுத்தனா். இதில் தனிப்பிரிவு ஆய்வாளா் கண்மணி மற்றும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com