கருங்கல்: புதுக்கடையில் ஒளிமயம் தொண்டு நிறுவனம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
பாா்த்திபபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க அலுவலா் சிவசங்கா் தலைமை வகித்தாா். புதுக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவா் மோகனகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், முன்சிறை ஊராட்சித் தலைவி ரெமா, தொண்டு நிறுவன தலைவா் நாராயண பிரகாஷ், கலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.