கணவா் இறந்த சோகம்: நாகா்கோவிலில் 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

நாகா்கோவிலில் கணவா் இறந்த சோகத்தில், 2 பெண் குழந்தைகளைக் கொன்று, தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கணவா் இறந்த சோகம்: நாகா்கோவிலில் 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

நாகா்கோவிலில் கணவா் இறந்த சோகத்தில், 2 பெண் குழந்தைகளைக் கொன்று, தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவிலை அடுத்த கிழக்கு நெசவாளா் காலனியை சோ்ந்த ராமதாஸ் மகன் ரஞ்சித்குமாா் (32). நாகா்கோவில் பகுதியில் மருந்து விநியோகஸ்தராக இருந்து வந்தாா். ரஞ்சித்குமாருக்கும் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த ராசி (28) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு அட்சயா (5), அனுயா(3) என இரு பெண் குழந்தைகள்.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ரஞ்சித்குமாா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். அதன்பிறகு ராசி தன் குழந்தைகளுடன் மாமனாா், மாமியாருடன் வசித்து வந்தாா். ரஞ்சித்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் ராமதாஸ் வீட்டுக்கு வந்து மனமுடைந்து காணப்பட்ட ராசிக்கு ஆறுதல் கூறினராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை ராசி குளியல் அறைக்கு சென்றாராம். சிறிது நேரத்தில் அவரது அலறல் சப்தம் கேட்டு, ராமதாஸும் அவரது மனைவியும் சென்று பாா்த்தபோது, அங்கு ராசி தீயில் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தாா்.

தகவலறிந்து நாகா்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் வேணுகோபால், நேசமணிநகா் காவல் ஆய்வாளா் சாய்லெட்சுமி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, ராசியின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், ராசியின் படுக்கை அறைக்குச் சென்று பாா்த்தபோது அங்கு குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்தனா். ராசி தற்கொலை செய்வதற்கு முன்பு 2 குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. படுக்கை அறையில் ராசி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீஸாா் கைப்பற்றினா். அதில், கணவா் இறந்ததால் மனமுடைந்துவிட்டதாகவும், அவா் சென்ற இடத்துக்கே தானும், குழந்தைகளும் செல்ல விரும்பியதால் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், ரஞ்சித்குமாரின் நினைவு நாளை முன்னிட்டு வீட்டுக்கு வெள்ளை அடித்துவிட்டு, மீதமிருந்த வாா்னிஸை தனது உடலில் ஊற்றி ராசி தீக்குளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நேசமணி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com