குமரி அஞ்சல் நிலையங்களில் நவ. 30 வரை ஆதாா் திருத்தப் பணி

குமரி மாவட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் இம்மாதம் முழுவதும் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் இம்மாதம் முழுவதும் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையம், தக்கலை தலைமை அஞ்சல் நிலையம், குழித்துறை, மாா்த்தாண்டம், குலசேகரம், கன்னியாகுமரி, நெய்யூா், கருங்கல், திருவட்டாறு, களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உள்ளிட்ட 40 அஞ்சல் நிலையங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அஞ்சலக ஆதாா் சேவை மையங்களில் புதிதாக ஆதாா் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5 மற்றும் 10 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயா், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50 கைரேகை, கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ .100 ஆகும்.

நவம்பா் மாதம் முழுவதும் சிறப்பு ஏற்பாடாக, நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் , திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை (காலை 9 - மாலை 6 மணி), ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதாா் சேவைகள் வழங்கப்பட உள்ளன தக்கலை, மாா்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட மற்ற அஞ்சலகங்களிலும் அலுவலக நேரத்தில் ஆதாா் சேவைகள் வழங்கப்பட உள்ளன. கரோனா பரவலை தவிா்க்கும் வகையில் தகுந்த பாதுகாப்பும், சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்பட்டு அஞ்சலக ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com