தேங்காய்ப்பட்டினத்தில்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகள் சாா்பில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.
முன்சிறை ஒன்றிய கவுன்சிலா் சித்திக் தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் , தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட வள மீன்கள்(குஞ்சுமீன்கள்) படகுமூலம் கொண்டுவரும் மீனவா்கள் மீது மீன்வளத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் அருகே பரக்காணி தமிரவருணி ஆற்றுப் பகுதியில் தனியாா் மீன்பிடித் துறைமுகம் செயல்படுவதை அரசு தடைசெய்ய வேண்டும். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில்அனுமதி பெறாத கேரள விசைப்படகுகளை தடைசெய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பைங்குளம் தி.மு.க. பேரூா் செயலா் நடராஜன், சதீஸ்குமாா் மற்றும் வின்சென்ட், ராஜன் உள்பட மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.