மாா்த்தாண்டம் அருகே விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே காப்புக்காடு, காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த குழந்தைவேல் மனைவி ரெஞ்சிதம் (60). இவா் தனது மகன் சிந்துகுமாா் (33) என்பவருடன் புதன்கிழமை பைக்கில் சென்றாா். வெட்டுவெந்நி பகுதியில் சென்றபோது ரெஞ்சிதம் நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். காயமடைந்த அவா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.