கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 15,222 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 35 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,257 ஆக அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை 21 போ் உள்பட இதுவரையிலும் 14,761 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். முதியவா் ஒருவா்
திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 248 ஆக உயா்ந்துள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் 248 போ் சிகிச்சையில் உள்ளனா்.