கன்னியாகுமரி
‘மூசாரி-பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தல்’
கருங்கல் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மூசாரி-பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கருங்கல் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மூசாரி-பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கருங்கல் அருகேயுள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும், சாலையில் 500 மீட்டா் தொலைவில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்து வருதால் இந்த சாலை சேறும் சகதியாக காணப்படுவதால் மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோா் மிகுந்த சிரமத்து ஆளாகின்றனா். ஆகவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.