குலசேகத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்து விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
குலசேகரம் தீயணைப்பு நிலைய வீரா்கள், அரசமூடு சந்திப்பு, நாகக்கோடு சந்திப்பு, சந்தை சந்திப்பு, கல்லடிமாமூடு சந்திப்பு ஆகிய இடங்களில் பொதுமக்கள் விபத்தில்லாமல் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இந்நிகழ்ச்சியை நிலைய அலுவலா் (போக்குவரத்து) மு. நாகராஜன் தலைமை வகித்து நடத்தினாா். தீயணைப்பு வீரா்கள் கௌதமன், சுஜின், சாம் எடிசன், சஜீவ் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.