தமிழக முதல்வரின் உத்தரவையடுத்து, கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாா்ச் 17 முதல் படகு சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் மாநில அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. ஆனால், சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடா்வதால் முக்கிய சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகையில்லாததால் சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா சேவையைத் தொடங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கைவிடுத்துவந்தனா்.
இந்நிலையில், குமரி மாவட்டத்துக்கு கரோனா ஆய்வுப் பணிக்காக செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, கன்னியாகுமரியில் படகு சேவை உடனடியாக தொடங்கப்படும் என உத்தரவிட்டாா். இதன்பேரில், கடந்த 6 மாதங்களாக படகுதளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் சோதனை ஓட்டம் விடப்பட்டன.
இதுகுறித்து பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளரிடம் கேட்டபோது, முதல்வா் உத்தரவின் பேரில் படகு சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும்வகையில் படகுகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.